போலீஸ் யூனிபார்மை கழற்றிவிட்டு மோத தயாரா?.. சவால் விட்டது முதல் கருணாஸ் கைது வரை.. நடந்தது என்ன?
சென்னை: திருவாடானை எம்எல்ஏ சர்ச்சைக்குரிய வகையில் பேசியது முதல் இன்று வரை நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.
செப் 16- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மற்றும் காவல் துறைக்கு எதிராக கருணாஸ் பேச்சு

செப் 20- கருணாஸ் பேசிய சர்ச்சை பேச்சு ஊடகங்களில் வெளியானது
செப் 20- கருணாஸ் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செப் 22, இரவு 10.30 மணிக்கு ரகசிய உத்தரவு வடபழனி காவல் நிலையத்தில் ஏராளமான போலீஸ் குவிப்பு
11.55 மணிக்கு- கருணாஸ் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள்
நள்ளிரவு 12.30 மணிக்கு- சாலிகிராமம் சத்திய மூர்த்தி தெருவில் உள்ள கருணாஸ் வீட்டில் ஊடகவியலாளர்கள் குவிந்தனர்
செப் 23 அதிகாலை 5.15 மணிக்கு- சத்தியமூர்த்தி சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீஸார்
5.20 மணிக்கு நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீஸார் கருணாஸ் வீட்டுக்கு நுழைந்தனர்
5.30- சர்ச்சைக்குரிய விதமாக பேசியது தொடர்பாக கைது செய்யப்படவுள்ளதாக கருணாஸிடம் விளக்கம் அளித்தனர்
6.27- கருணாஸ் கைது செய்யப்பட்டு வீட்டுக்கு வெளியே அழைத்து வரப்பட்டார்
6.30 மணிக்கு கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்
6.45 மணிக்கு - நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்
10.23 மணிக்கு - ராயப்பேட்டை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார் கருணாஸ். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
11.45 மணிக்கு- கருணாஸை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு












Click it and Unblock the Notifications