இந்த பேச்சு பாசிசத்தை வளர்க்க உதவும்.. எச்.ராஜாவிற்கு ஹைகோர்ட் கண்டனம்!
Recommended Video
சென்னை: நீதித்துறையை களங்கப்படுத்துவது பாசிசத்தை வளர்க்கவே உதவும் என்று எச்.ராஜாவிற்கு ஹைகோர்ட் நீதிபதிகள் அதிரடி கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எச். ராஜா வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வழக்கறிஞர்கள் இன்று நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையிலான அமர்விடம் மனு அளித்தனர். அப்போது, நீதிபபதி அதற்கு விளக்கம் அளித்தார்.
அக்டோபர் 2ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் எச். ராஜாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் கடமை என்றும், காவல்துறையும், அரசும் இந்த விவகாரத்தை மறந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் விளாசினர்.
மறப்போம், மன்னிப்போம் என்று போய் விடுவார்கள் அவர்கள் என்றும், நீதித்துறையின் கண்ணியத்தை நாம்தான் காத்தாக வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், ராஜாவிற்கு எதிராக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய உத்தரவிடாத ஹைகோர்ட், அவமதிப்பு வழக்கு தொடர அனுமதியளித்தது.