“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள் நீக்கம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-க்குள் முடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அரசாணையை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த மனு புதன்கிழமை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'மக்களின் மனதில்தான் பாகுபாடு இருக்கிறது. அதையே மாற்ற முயல வேண்டும். அதை விடுத்து தெருப் பெயர்களை மாற்றுவதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர இயலாது' என்றனர்.
அதற்கு அரசு தரப்பில், 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனத்திலும் மாற்றம் வரும்' எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications