சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முடிவு : உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஆணைய ஊழியர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஆர்.சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்டிதருந்தார். அந்த மனுவில் சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார்.

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.பிரகாஷ், வழக்குரைஞர் ராகவலு நாயுடு ஆகியோர், அரசின் நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடினர். இந்த வழக்கை பிப்ரவரி 5-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை, தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடைவிதிப்பதாக அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications