ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று கூறும் தினகரனை வரலாறு மன்னிக்காது - ஜெயக்குமார்
சசிகலா, தினகரன் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: தினகரன், திவாகரனின் நாக்குகள் நயவஞ்சகத்தனமானவை என்று அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். தினகரனை வரலாறு மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, தினகரன் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டு மொத்த உருவங்கள் என்றார்.
இவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தமிழகத்தை சூறையாடி வளைத்து போட்டுள்ளனர்.

தகுதியில்லை
சசிகலாவை ஜெயலலிதா விட்டுவிட்டார் என திவாகரன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சிக்க அவர் தகுதியில்லாதவர். தினகரன், திவாகரனின் நாக்குகள் நயவஞ்சகத்தனமானவை.

தினகரன் பேட்டி
தினகரன் ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்கிறார். இவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த தினகரன், ஜெயலலிதாவை முதல் குற்றவாளி என்று கூறியிருந்தார்.

தவறாக பேசவில்லை
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்எல்ஏ வெற்றிவேல், எந்த சூழலிலும் ஜெயலலிதாவை சசிகலாவோ, குடும்பமோ தவறாக பேசியது கிடையாது என்று கூறியுள்ளார்.

கோமாளி ஆட்சி
எல்லா சூழலிலும் ஜெயலலிதாதான் எல்லாமே என்று சசிகலா இருந்தார். ஜெயக்குமார் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த அரசு மக்களுக்காக செயல்படவில்லை. தமிழகத்தில் கோமாளித்தனமான ஆட்சி நடந்தால், ஆளுநர், பாஜக என யார் கை வேண்டுமானாலும் ஓங்கும்.












Click it and Unblock the Notifications