சென்னையில் கொல்லப்பட்ட இந்து முன்னணி தலைவரின் அஸ்தி குமரிக் கடலில் கரைப்பு
நாகர்கோவில்: சென்னை அம்பத்தூர் அருகே படுகொலை செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமாரின் அஸ்தி, கன்னியாகுமரி கடலில் இன்று கரைக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரியில் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த்து.
திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்த சுரேஷ்குமார் கடந்த 19-ந் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் நேற்று முன்தினம் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கக்கோடு கிராமத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யபட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்று சுரேஷ்குமாரின் உடல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் கரைக்கப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சுரேஷ் குமாரின் வீட்டில் அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியையொட்டி கக்கோடு மற்றும் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications