காவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
சேலம்: கர்நாடக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஓகேனக்கல் அருவில் தண்ணீர் கொட்டுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தாலும் தண்ணீர் கொட்டுவதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

விநாடிக்கு 10000 கடி அடி நீர்
கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 4,037 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கர்நாடக அணைகளில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசலில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்து, வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் ஒன்றே கால் அடி உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஆடிப்பெருக்கு தண்ணீர்
ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர ஊர்களிலும், காவிரி ஆறு பாயும் ஊர்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடும். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆறு பொங்கி வர வேண்டும் என்று இப்போதே வருணபகவானை வேண்டத் தொடங்கியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications