ஜெ. மரணத்துக்கு யார் மீதும் குற்றம்சுமத்த வேண்டாம்: பொன்னையன் திடீர் வேண்டுகோள்
ஜெயலலிதா மரணத்துக்கு யாரையும் பொறுப்பாக்க வேண்டாம் என பொன்னையன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவும் வேண்டாம் எனவும் பொன்னையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்துக்கு யார் மீது குற்றம் சுமத்த வேண்டம் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுகவினரே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான வீடியோவை வெளியிடவும் அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சென்னையில் இன்று அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் பொன்னையனோ, நுரையீரல் தொற்று காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவரது மரணத்துக்கு இவர்தான் அவர்தான் காரணமென பொறுப்பாக்குவதை ஏற்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications