சென்னையில் களைகட்டியது “ஹோலி” கொண்டாட்டம்
சென்னை: வட இந்தியர்களின் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சென்னையிலும் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
பனி காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ஹோலி. விவசாயிகள் அறுவடை முடித்து, நிறைந்த மனத்துடன் இதை கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின் போது வண்ணப் பொடிகளைத் தூவி மக்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
சென்னையில் வட இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் சவுகார்பேட்டை, யானைக்கவுனி, வேப்பேரி, புரசைவாக்கம் போன்ற இடங்களில் ‘ஹோலி' பண்டிகை உற்சாகம் கரை புரண்டு ஓடியது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை வயது வித்தியாசமின்றி வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், தண்ணீரில் வண்ண நிறங்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி அடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மெரினா கடற்கரையில் சில வடநாட்டு இளைஞர்கள் அங்கு வந்த தமிழக இளைஞர்கள் மீது வண்ண பொடிகளை பூசினர். வடநாட்டு பண்டிகையாக இருந்தாலும் தமிழக இளைஞர்களும் அவர்களுடன் இணைந்து வண்ண பொடிகளை பூசி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பின்னர், குழுவாக நின்று ‘செல்பி' எடுத்துக்கொண்டனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications