மிரட்டும் பன்றிக் காய்ச்சலை விரட்டும் பாட்டி வைத்தியம்
சென்னை: பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க நம் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1, 500 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கடந்த முறை பரவியதை விட மோசமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க பலர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்கிறார்கள். நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கற்பூரம்
ஒரு கற்பூரம், 6 ஏலக்காய் மற்றும் 6 கிராம்பை எடுத்து அதை பொடியாக்கி ஒரு மெல்லிய துணியில் கட்டி வைத்து அதை அடிக்கடி முகர்ந்து பார்க்கவும். இரண்டு நாளைக்கு ஒரு முறை துணியில் புதிய பொடியை நிரப்பவும்.

துளசி
தினமும் காலை எழுந்தவுடன் 5 துளசி இலைகளை மென்று விழுங்கவும். துளசி தொண்டை பிரச்சனைகளுக்கு நல்லது.

பால்
தினமும் இரவு தூங்கும் முன்பு ஒரு கிளாஸ் பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கவும்.

பூண்டு
தினமும் காலை 2 பல் பூண்டை சுடுதண்ணீருடன் எடுத்துக் கொள்வதும் பன்றிக் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.












Click it and Unblock the Notifications