மக்களை நம்பித்தான் பாமக தனித்து போட்டியிடுகிறது: ராமதாஸ் !
ஆரணி: வருகிற சட்டசபைத் தேர்தலில் பாமக மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆரணி அடுத்த விண்ணமங்கலம், பூசிமலைகுப்பம், பாளைய ஏகாம்பரநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் பா.ம.க.வின் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றப்போகும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க மக்களை நம்பி தனியாக போட்டியிடுகிறது. பா.ம.க ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் மது, ஊழல் அடியோடு ஒழிக்கப்படும். ஒரு துளி மது கூட தமிழ்நாட்டில் இருக்காது.
பா.ம.க.வின் அறிக்கைகள் வந்த பிறகுதான் மற்ற கட்சிகள் தேர்தல் நேரத்தில் அதே வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றப்பார்க்கின்றன. இதை மக்கள் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்றார். மேலும் அவர் கூறுகையில், வருகின்ற தேர்தலில் ஏற்கனவே 50 ஆண்டு காலம் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் கட்சிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.
பா.ம.க.வை வெற்றி பெற வைத்து ஆட்சி பீடத்தில் அமர வைத்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். தரமான கல்வி, மருத்துவம் கிடைக்கும். விவசாய வளர்ச்சிக்கு பா.ம.க. என்றுமே உறுதுணையாக இருக்கும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications