கோடையின் உச்சம்: 2 நாட்களுக்கு வெயில் கொளுத்த போகுதாம்-வானிலை மையம் வார்னிங்
அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களான மதுரை, வேலூா் உட்பட 8 மாவட்டங்களில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோடையின் உச்சக்கட்டத்தை தமிழகம் எட்டியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்ற செய்தி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது என்றும், தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியில் அதிகபட்சமாக 111 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் நோக்கி வெப்பக்காற்று வீச உள்ளதால், வேலூா், சேலம், திருச்சி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என வாலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதுடன், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என ஆய்வு மையம் ஆறுதல் செய்தியை அளித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் திருவள்ளுர், திருச்சி, வேலூர், சேலம், பரமத்தி, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications