டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

how 450 people have passed the Group 4 Steno Typist exam from Sankarankovil?

கடந்த ஆண்டு ஜுலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வை சுமார் 18 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு முடிவுகள் 9 மாதங்களாக வெளியாகமல் இருந்த நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பு குரூப் 4 அரசுப் பணிகளுக்கு கூடுதலாகப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன.

இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர், வரித் தண்டலர் உள்ளிட்ட பணிகளுக்கான மொத்த பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அதேபோல சுருக்கெழுத்தர் தட்டச்சர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 1,024-ல் இருந்து 1176 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே குரூப்-4 தேர்வு முடிவுகள குறித்து சர்ச்சை எழுந்தது. நன்றாக படித்தவர்களுக்கு சரியான மதிப்பெண் அளிக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறிப்பிட்ட மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. அதே போல் குரூப் 4 தேர்வில் ஒரே குறிப்பிட்ட மையத்தில் இருந்து மட்டும் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சை எழுந்தது. தென்காசி மற்றும் காரைக்குடி பகுதியில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதாக புகார்கள் எழுந்தது.

how 450 people have passed the Group 4 Steno Typist exam from Sankarankovil?

இந்நிலையில் சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

2500 ஸ்டெனோ டைப்பிஸ்ட் காலிப்பணியிடங்களில், 600க்கும் மேல் தென்காசி மாவட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்க வெளியாகி உள்ளது. குறிப்பாக 450 பேர் சங்கர் கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் இருந்து தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+