ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டுள்ள எக்மோ கருவி எப்படி செயல்படும்..? 'டாக்டர்' தமிழிசை விளக்கம்
நுரையீரல் செய்யும் வேலையைத்தான் எக்மோ கருவி செய்யும் என்று தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தக் கருவி நுரையீரல் செய்யும் வேலையை செய்யும் என்று தமிழக பாஜக தலைவரும், டாக்டருமான தமிழிசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா உடல் நிலை குறித்து இன்று அப்போலோ மருத்துவமனை 13வது மருத்துவ அறிக்கையை அளித்துள்ளது. அதில் ஜெயலலிதாவிற்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி என்ன வேலையைச் செய்யும் என்று தமிழிசை விளக்கியுள்ளார். ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஒரு மருத்துவராக அவர் பேசியது:
தமிழக முதல்வர் குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் அவர் உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்பது தெரிகிறது. அவசர கட்டத்தில்தான் எக்மோ என்று சொல்லக் கூடிய கருவிகள் நோயாளிக்கு பொருத்தப்படும். இது பொருத்தப்பட்டால் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றுதான் அர்த்தம். இந்தக் கருவி பொருத்தப்பட்டதில் இருந்து ஜெயலலிதா அபாய கட்டத்தில் இருக்கிறார் என்பது தெரிகிறது.
மனித உடலில் நுரையீரல் செய்யும் வேலையைத்தான் இந்த எக்மோ கருவி செய்கிறது. இந்தக் கருவியை பொருத்துவது அபாயமான நிலையில்தான் என்றாலும் பல நோயாளிகள் உயிர் பிழைத்து வந்துள்ளனர். அதே போன்று ஜெயலலிதாவும் நலம் பெற்று வீடு திரும்பி வருவார்.
அவர் உடல் நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருப்பது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு நடவடிக்கைதான் என்று தமிழிசை கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications