கருணாநிதி எப்படி 'கலைஞர்' ஆனார்?
திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்தவர் அப்போதைய நடிகர் எம்ஆர் ராதா.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் பட்டத்தை கொடுத்தவர் அப்போதைய நடிகர் எம்ஆர் ராதா.
திமுக தலைவர் கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் சமயோசித திறமையால் சிறுவயதிலேயே அப்போதே பிரகாசித்தவர் கருணாநிதி.

பல படங்களுக்கு வசனம்
அரசியல்வாதியாக மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தா, கவிஞர், பத்திரிக்கையாளர் என பல முகங்களை கொண்டவர் கருணாநிதி. பராசக்தி, பூம்புகார், மனோகரா உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் கருணாநிதி.

மேடை நாடகங்கள்
கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான படங்கள் பெரும் ஹிட். இதனால் திரைத்துறையில் தனக்கென ஓர் முத்திரை பதித்தார் கருணாநிதி. மேடை நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதி இயக்கியவர் கருணாநிதி.

தூக்கு மேடை
அப்படி அவர் கதை வசனம் எழுதிய நாடகம்தான் தூக்கு மேடை. முற்றிலும் பகுத்தறிவு பிரச்சாரமாக அமைந்தது இந்த நாடகம். இந்த நாடகத்தில் பாண்டியன் வேடத்தில் நடித்திருந்தார் கருணாநிதி.

எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதி
இந்த நாடக விளம்பரத்தில் "அறிஞர் கருணாநிதி' என்று எழுதப்பட்டிருந்தது. "அறிஞர்' பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும். அதை எடுத்தால்தான் நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார் கருணாநிதி.

கலைஞர் கருணாநிதி
உடனே "கலைஞர் கருணாநிதி' என்று விளம்பரம் செய்தார் எம்ஆர் ராதா. இதைத்தொடர்ந்து மனோகரா படத்தில் முதல் முறையாக கலைஞர் கருணாநிதி என்று பெயர் போடப்பட்டது.

5 முறை அரியணை
13 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. 5 முறை தமிழக முதல்வராக அரியணை ஏறியவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications