தலைவர்னா எப்படி இருக்கனும் தெரியுமா...?
சென்னை: தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. பழைய தலைவர்களையெல்லாம் இழந்த விளைவை இப்போது மக்கள் நேரில் பார்த்து உணர ஆரம்பித்து விட்டனர்.
ஒரு கட்சியின் தலைவர் என்றால் கட்சியை முன்னெடுத்து செல்வதும், தொண்டர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது, மக்கள் நல திட்டங்களை செய்வதும் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி மிகப் பெரிய பொறுமைசாலியாக இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. காரணம் இது சோசியல் மீடியா காலம்.
நேருக்கு நேராக நிற்க வைத்து திட்டினால் கூட தாங்கிக் கொள்ளும் அளவுக்கு தலைவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் மக்கள் அத்தனை பிரச்சினைகளை இன்று சந்தித்துக் கொண்டுள்ளனர் (இந்தப் பிரச்சினைகளுக்கும் கூட பெரும்பாலும் இதே தலைவர்கள்தான் காரணமாக இருப்பது வேற விஷயம்) பொது வாழ்க்கைக்கு அடிப்படை தேவையே பொறுமை, நிதானம், சிந்திக்கும் செயல்திறன் ஆகியவைதான்.

ஆயிரம் விமர்சனங்கள் ஆயிரம் விமர்சனங்கள்
பழுத்த மரம் கல்லடிப்படத்தான் செய்யும் என்பது போல் பொது வாழ்க்கைக்கு என்று வந்துவிட்டால் ஆயிரம் விமர்சனங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். ஆனால் இவற்றுக்கு நிதானமாக பதில் அளிக்க வேண்டியது அரசியல்வாதிகளின் கடமை ஆகும். அதுவும் தலைவர் பொறுப்பில் இருப்போருக்கு இது மிகவும் அவசியம் ஆகும்.

ஜெ. போன்றோர்
பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோர் விமர்சனங்களை புன்னகையுடன் எதிர்கொண்டு, சிறப்பாக அதை சமாளித்தனர், சரி செய்தனர். அதிலிருந்து தவறுகளை சரி செய்து அரசியலில் வீறு நடை போட்டனர். அதுபோல்தான் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும்.

தனிப்பட்ட முறை
இவர்கள் எப்போதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததில்லை. இவர்கள் மீதான விமர்சனங்களையும் நேர்மறையாகவே எடுத்து கொண்டனர். ஆனால் புள்ளிவிவரங்களுடன் இவர்கள் பேசி எதிராளியின் வாயை அடைத்தனரே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை.

சர்வாதிகாரமாக மாறிவிடும்
ஜெயக்குமார் மீது எத்தனை எத்தனை விமர்சனங்கள். அவரது உருவத்தை வைத்து கிண்டலடித்தாலும் அவற்றை படித்து பார்த்து ரசித்து விட்டு சென்றுவிடுவார். எனவே அரசியல்வாதிகளுக்கு பொறுமை அவசியம் தேவை. தோல்விகளை படிக்கற்காக எடுத்துக் கொள்வது போல் விமர்சனங்களை வெற்றிப்படிகளாக நினைத்து அதை புறந்தள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் கைது, வழக்கு என்றால் அது சர்வாதிகாரமாக மாறிவிடும் என்பது நிதர்சனம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications