For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரிய திட்டம்.. கோடிக்கணக்கில் முறைகேடு.. மோடியின் பணமதிப்பிழப்பால் பயனடைந்த நீரவ் மோடி!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நீரவ் மோடி பல கோடிக்கணக்கில் பயனடைந்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்த நீரவ் மோடி!- வீடியோ

    சென்னை: பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நீரவ் மோடி பல கோடிக்கணக்கில் பயனடைந்து இருக்கிறார். பல கருப்பு பண முதலைகளின் பணம் முறைகேடாக வெள்ளையாக மாற்றப்பட்டு இருக்கிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

    நீரவ் மோடியின் நிறுவனங்கள், வீடுகள் உட்பட 17 இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த நிலையில் இவர் எப்படி எல்லாம் முறைக்கேடு செய்துள்ளார் என்று நியூஸ்18 ஆங்கில ஊடகம் கண்டுபிடித்துள்ளது.

    பணமதிப்பிழப்பு

    பணமதிப்பிழப்பு

    சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏடிஎம் நோக்கி ஓடினார்கள்.

    பல்லாயிரம்

    பல்லாயிரம்

    அதே சமயத்தில், 8 மணிக்கு பிறகு நீரவ் மோடியின் நகை கடையில் ஒரே இரவில் 52,000 பேர் நகை வாங்கி இருக்கிறார்கள். மறுநாள் இரவு வரை விடாமல் வியாபாரம் நடந்து இருக்கிறது. நகை வாங்கிய நபர்கள் எல்லோரும் முக்கிய புள்ளிகள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தேதி

    முந்தைய தேதி

    இவர்கள் எல்லோரும் அந்த தேதியில் நகை வாங்கினாலும் முன்தேதியிட்டே பில் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வரை முன்தேதியிட்டு பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பான்கார்ட் கொடுக்க கூடாது என்பதற்காக, பில் தனி தனியாக பிரித்து அளிக்கப்பட்டு இருக்கிறது.

    கோடி

    கோடி

    இதன் மூலம் வெறும் 12 மணி நேரத்தில் 90 கோடி கருப்பு பணம் வெள்ளையாக மாறியுள்ளது. மறுநாள் எவ்வளவு பணம் மாற்றப்பட்டது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. மக்கள் அங்கு வரிசையில் நின்ற போது, இங்கே நீரவ் எளிதாக அதை பயன்படுத்தி மோசடி செய்துள்ளார்.

    பெரிய மோசடி

    பெரிய மோசடி

    இதன் மூலம் நீரவ் மோடியின் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் வர்த்தகம் ஆகியுள்ளது. அதேபோல் முக்கியஸ்தர்களின் கமிஷன் தொகையும் கிடைத்து இருக்கிறது. இன்னும் இதில் வெளிவர வேண்டிய தகவல்கள் நிறைய இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBI on Wednesday received two complaints from Punjab National bank against billionaire jewellery designer Nirav Modi and a jewellery company regarding fraudulent transactions worth over Rs 10,000 crore. However, Investigation agencies are clueless about the whereabouts of Nirav Modi, the prime accused in the case. Nirav Modi has left India. Rs 5,100 crore seized from Nirav Modi assets
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X