எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும்? என்ன சொல்கிறது இந்திய வானிலை மையம்?
எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
Recommended Video

டெல்லி: எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரண்டாவது நாளாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று எப்படி இருக்கும்?
இந்நிலையில் எந்தெந்த நாளில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதியான இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
[கடலூர் அருகே நடுக் கடலில் 30 மீனவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்! ]

அக்டோபர் 6 ஆம் தேதி
அக்டோபர் 6ஆம் தேதியான நாளை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு மத்திய அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி
அக்டோபர் 7ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தமிழகம் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அன்றைய நாளில்தான் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளில் மீனவர்கள் அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

அக்டோபர் 8ஆம் தேதி
அக்டோபர் 8ஆம் தேதியான வரும் திங்கள் கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளும் மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதி
அக்டோபர் 9ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கர்நாடகாவின் கலோர பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும். அக்டோபர் 9 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications