Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும்? என்ன சொல்கிறது இந்திய வானிலை மையம்?

எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கனமழை வருமா? தமிழகத்திற்கு ரெட் அலர்ட்- வீடியோ

    டெல்லி: எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரண்டாவது நாளாக விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 9 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று எப்படி இருக்கும்?

    இன்று எப்படி இருக்கும்?

    இந்நிலையில் எந்தெந்த நாளில் எவ்வளவு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி அக்டோபர் 5ஆம் தேதியான இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், கேரளா, தெற்கு கர்நாடகா ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    [கடலூர் அருகே நடுக் கடலில் 30 மீனவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்! ]

    அக்டோபர் 6 ஆம் தேதி

    அக்டோபர் 6 ஆம் தேதி

    அக்டோபர் 6ஆம் தேதியான நாளை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு மத்திய அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அக்டோபர் 7ஆம் தேதி

    அக்டோபர் 7ஆம் தேதி

    அக்டோபர் 7ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தமிழகம் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அன்றைய நாளில்தான் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளில் மீனவர்கள் அரபிக் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

    அக்டோபர் 8ஆம் தேதி

    அக்டோபர் 8ஆம் தேதி

    அக்டோபர் 8ஆம் தேதியான வரும் திங்கள் கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அன்றைய நாளும் மீனவர்கள் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    அக்டோபர் 9ஆம் தேதி

    அக்டோபர் 9ஆம் தேதி

    அக்டோபர் 9ஆம் தேதியான செவ்வாய்க்கிழமையும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கர்நாடகாவின் கலோர பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும். அக்டோபர் 9 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+