வரதட்சணைக்காக கர்ப்பிணிப்பெண்ணை அடித்து கொன்ற கணவர் மாமியார்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கர்ப்பம் தரித்திரிந்த புதுமணப்பெண்ணான இளம் பெண் ஒருவரை தாலி கட்டிய கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமை படுத்தி கொன்ற சம்பவம் அங்கு நெஞ்சை பதற வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை பக்கமுள்ள இராசிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நடராஜ் . இவருக்கும், சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த சுகுணா என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கருவுற்று இருந்த சுகுணா நேற்று திடீர் என்று அவரது கணவர் வீட்டில் சுகுணா இறந்து விட்டதாக சுகுணாவின் தந்தை முத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மகளின் உடலை போய் பார்த்த முத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி மகுடஞ்சாவடி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவரது கணவர் நடராஜ், மாமியார் காவேரி, மாமனார் பழனிசாமி ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தான் தனது மகள் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் தனது மகளை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்றும், அதில் தொடர்புள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுகுணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 5 மாதங்களிலே புதுப்பெண் சுகுணா மர்மமான முறையில் இறந்ததால் சங்ககிரி உதவி கலெக்டர் அரங்கநாயகி தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது சுகுணாவை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியது தெரிய வந்தது. இதையொட்டி மகுடஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுணாவின் கணவர் நடராஜ், அவரது தந்தை பழனிசாமி, தாயார் காவேரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+