நடுராத்திரி.. காட்டுப்பகுதி.. மனைவியுடன் மற்றொருவர்.. கணவன் செய்த வெறிச்செயல்!
மனைவி மற்றும் கள்ளக்காதலனை கணவன் கொன்று சரணடைந்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: கடைசி வரைக்கும் இந்த கள்ளக்காதலை மட்டும் ஒழிக்கவே முடியாது போலிருக்கு. இதனால் இன்னும் எத்தனை கொலைகளும், தலைகளும் உருண்டு விழ போகிறதோ தெரியவில்லை.
கோவில்பட்டியை அடுத்துள்ள கிராமம் மும்மலைப்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமாரியம்மாள். ஹரிகிருஷ்ணன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். பெரும்பாலும் கேரளாவில்தான் இந்த கட்டிட வேலையை செய்து வருகிறார். அதனால் தன் கிராமத்தில் இவர் இருப்பதே கிடையாது. வேலை விஷயமாக கேரளாவிலேயே இருப்பார்.

மனைவியை கண்டித்தார்
இதனை சாக்காக பயன்படுத்தி கொண்ட தங்கமாரியம்மாள், அதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். தன் கிராமத்துக்கு வரும்போதெல்லாம் அரசல் புரசலாக மற்றவர்கள் ஹரிகிருஷ்ணனிடம் இந்த முறையற்ற உறவு பற்றி சொன்னார்கள். இது இல்லாமல், ஹரிகிருஷ்ணனே இதை நேரிடையாக பார்த்தார். பின்னர் தன் மனைவியை கூப்பிட்டு , பெருமாளுடன் இனி பேசக்கூடாது என கண்டித்துள்ளார். ஆனால் தங்கமாரியம்மாள் பெருமாளுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்தவே இல்லை.

கேரளாவில் வெள்ளம்
இந்நிலையில், கேரளாவில் வெள்ளநீர் பிரச்சனை ஏற்படவும், ஹரிகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்றுவிட்டார். வெள்ள பாதிப்பில் தாங்கள் கட்டி வரும் கட்டிடங்கள் குறித்து அறிய கேரளாவிலேயே தங்கிவிட்டார். கேரளாவின் பாதிப்பு குறித்து அறிந்த தங்கமாரியம்மாள், இப்போதைக்கு ஹரிகிருஷ்ணன் ஊருக்கு வரமாட்டார் என்ற தைரியத்தில் வழக்கம்போல் பெருமாளுடன் ஊர்சுற்ற கிளம்பிவிட்டார்.

காட்டுப்பகுதியில் மனைவி
இந்த நிலையில், ஹரிகிருஷ்ணன் நேற்றிரவு தன் கிராமத்துக்கு வந்தார். வீட்டில் மனைவியை காணோம். வீடும் பூட்டப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் மனைவியை தேட ஆரம்பித்தார். அப்போது ஊரை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் மனைவியும் பெருமாளும் ஒன்றாக இருப்பதை கண்டு ஹரிகிருஷ்ணன் ஆத்திரமடைந்தார்.

போலீசில் சரண்
இருவரையும் அரிவாளால் அங்கேயே சரமாரியாக வெட்டினார். இதில் இருவருமே சுருண்டு விழுந்து இறந்தனர். கொலை செய்துவிட்ட ஹரிகிருஷ்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி, ஹரிகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications