திருமண நிகழ்ச்சிக்கு சென்ற பஸ்ஸில் தீவிபத்து ...அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர் - வீடியோ
ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏசி பேருந்தில் சிலர் சென்றனர். அப்போது பேருந்து தீவிபத்துக்குள்ளானது. பயணிகள் முன்கூட்டியே இறக்கிவிடப்பட்டதால் தப்பித்த
ஹைதராபாத்: திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் சென்ற பேருந்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்த பயணிகள் தப்பினர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினத்துக்கு குளிரூட்டப்பட்ட பேருந்தில் 50 பேர் சென்றிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் எந்த இடையூறும் இல்லாமல் சென்ற பேருந்தில், அனஹாபள்ளி என்ற ஊரை நெருங்கும்போது, பேருந்தில் இருந்து புகை வந்துள்ளது. இதைக் கவனித்த சிலர், உடனே பேருந்தில் இருந்து அனைவரையும் வேக வேகமாக கீழே இறக்கியுள்ளனர்.
பேருந்தில் இருந்து அனைத்துப் பயணிகளும் இறங்கிய சில நிமிடங்களில் மொத்தப் பேருந்தும் தீப்பற்றி எரிந்து நாசமானது. பேருந்தில் பயணித்த சிலர் எச்சரிக்கையாக இருந்த காரணத்தால் அனைவரது உயிரும் தப்பியது.
குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் இருக்கும் எரிவாயு கசிவால் இவ்வாறான விபத்துகள் நிகழ்கின்றன. குளிரூட்டப்பட்ட பேருந்துகளை சரிவர பராமரித்தால் இம்மாதிரியான விபத்துக்கள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications