வெற்றி யாருக்கு என்பதை கணிக்கவே முடியலையே.. ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. எனவே யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதைக் கணிப்பது சிரமம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. இதனால், ஓட்டுகள் பிரிந்து சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலையில் எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று, யாராலும் உறுதியாக கணிக்க முடியாது.
யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாத சூழ்நிலையில், காங்கிரஸ் பொறுத்தமட்டில், நம்பிக்கையோடு நாங்கள் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம். எங்களுக்கு கை கொடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications