பிரதமர், ஆளுநரிடம் அரசியல் நிலவரம் பற்றி பேசவில்லை.. ஓ.பி.எஸ் பேட்டி
சென்னை: தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த நினைப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் முதல்வராக கடமையாற்றுவேன் என்றார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஜெயலலிதாவை மருத்துவமனையில் என்னால் சந்திக்கவே முடியவில்லை. மருத்துவர்கள் அம்மாவை சந்திக்க கூடாது என கூறிவிட்டதாக அவருடன் உடனிருந்தவர்கள் கூறினர். எனவே நானும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
சட்டசபையில் அனைத்து அதிமுக உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். என்னிடம் பிரதமரோ, ஆளுநரோ இதுவரை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஆளுநரை தொடர்பு கொண்டு நான் பதவி விலகிய தகவலை தெரிவித்தேன். காபந்து முதல்வராக தொடருமாறு ஆளுநர் தெரிவித்தார். அதன்படி முதல்வர் பதவியை தொடர்கிறேன்.
தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த நினைப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் முதல்வராக கடமையாற்றுவேன் என்றார் அவர்.