மோடியை ஓபிஎஸ் ஏன் சந்தித்தார்.. எனக்குத் தெரியாது.. பொன். ராதாகிருஷ்ணன் கிரேட் எஸ்கேப்

பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஏன் சந்தித்தார் என தனக்கு தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை; பிரதமர் மோடியை எதற்காக சந்தித்தார் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தமிழக மக்கள் பிரச்சனை குறித்து மனு கொடுத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதற்கு, விவசாயிகளை சந்திக்க முடியாத பிரதமர் மோடி, ஓபிஎஸ்ஸை மட்டும் எப்படி சந்தித்தார். அதற்கான காரணம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தெரியாது

தெரியாது

மதுரைக்கு சென்றுள்ள மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அவர், பிரதமர் மோடியை ஓபிஎஸ் ஏன், எதற்காக சந்தித்தார் என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறினார்.

காரணம்

காரணம்

மேலும், பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க உரிய காரணங்கள் இருந்திருக்கலாம். அந்த வகையில் அவர் ஓபிஎஸ்ஸை சந்தித்திருக்கலாம் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறி எஸ்கேப் ஆனார்.

3400 கோடி

3400 கோடி

இரட்டை ரயில் மற்றும் மின் மயமாக்கப்பட்ட வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக 3400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

மீனவர் பிரச்சனை

மீனவர் பிரச்சனை

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது ஏற்படும் பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது. 100 கோடி ரூபாய் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+