ஆர்கே.நகரில் எனக்கு நல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது... சொல்கிறார் தீபா!
ஆர்கே.நகரில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து நிர்வாகிகளின் பட்டியல், கட்சியின் சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.
ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் சசிகலா தலைமையை ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும்.
அங்கு வேறு யாருக்கும் இடம் கிடையாது. ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள். என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.