நான் கைது செய்யப்படவில்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத் வீட்டில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக இருவரிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

I have not been arrested - natham Viswanathan

இந்த விசாரணைணயில், கடந்த சட்டசபை தேர்தலின் போது கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போது நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கீர்த்திலால் குழுமத்தில் நடந்த சோதனையில் ரூ.2.5 கோடி கைப்பற்றப்பட்டு என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத்திடம் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து தான் கைது செய்யப்படவில்லை என நத்தம் விஸ்வநாதன் தனியார் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+