விரைவில் 2 அதிமுக அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்: ஈ.வி.கே.எஸ்.
ஈரோடு: அதிமுக அமைச்சர்கள் 2 பேர் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா செய்த ஊழல்களை பற்றி அனைத்து கட்சிகளும் பேசிக் கொண்டிருக்கிறது. நாங்களும் அவற்றை உரிய ஆதாரங்களுடன் கூறி வருகிறோம். ஈரோடு மற்றும் சேலத்தைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் செய்த ஊழல்களை விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
முதலில் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்திவிட்டு பின்னர் கூட்டணி பற்றி பேசலாம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications