போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்
போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
விலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா?
பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில், ஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.
Equally shocked (to see video of cop committing arson), hope some sort of explanation is given to us so that we can calm down: Kamal Haasan pic.twitter.com/j6sl0jNJNF
— ANI (@ANI_news) January 24, 2017
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லைகள் நாமாக உருவாக்கியது. எல்லைகளை அளித்துவிட்டு மனிதர்கள் அனைவரும் அன்போடு வாழ வேண்டும் என்பதே எனது கருத்து. இவ்வாறு கமல் தெரிவித்தார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications