கரூரில் தொடரும் ஐடி ரெய்டு - ரூ. 50 கோடி பினாமி சொத்து சிக்கியது - வீடியோ
கரூரில் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை 3வது நாளாக நீடிக்கிறது.
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் 3 வது நாளாக இன்று நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ. 50 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் சிக்கியது தெரியவந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது.

3வது நாளாக இன்றும் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் சோதனை தொடருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.
இதில் 1.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களும் வருமான வரி சோதனையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர ஏராளமான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் சோதனை தொடரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications