சட்டத்தை மதித்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்நாளை ஆஜராவேன்: விஜயபாஸ்கர்
சென்னை நுங்கம்பாக்த்தில் உள்ள வருமான வரித்துறையினர் முன்பு நாளை நிச்சயம் ஆஜராவேன் என்று தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு நிச்சயம் தாம் நாளை ஆஜராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆர்கே.நகரில் ரூ. 89 கோடி வரை பண வரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணமும் அதில் அமைச்சர்கள் பணத்தை பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுதவிர முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் மூவரும் நாளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், நாளை சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நிச்சயம் ஆஜராவேன். ஏனெனில் நான் சட்டத்தை மதிப்பவன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications