மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை!- குஷ்பு
சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவருடைய பெயரில் காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. காரணம், குஷ்பு வீடு இருப்பது மயிலாப்பூரில்தான்.

தி.மு.க. கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிதான் பெற்றுள்ளது. எனவே குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதனைக் குஷ்பு மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "ஒவ்வொரு தேர்தலின் போதும் நான் போட்டியிடப் போவதாக யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது இந்த தேர்தலிலும் மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட போவதாக செய்திகள் பரவி இருக்கிறது. அது உண்மை இல்லை. நான் தேர்தலில் போட்டியிட போவதில்லை," என்றார்.
மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications