மகனை இழந்த துயரம்.. இனி குடிக்க மாட்டேன்.. கதறி அழும் தினேஷின் தந்தை மாடசாமி
இனி மது அருந்தபோவதில்லை என தினேஷ் தந்தை மாடசாமி உறுதி அளித்துள்ளார்.
Recommended Video

சங்கரன்கோவில்: என் மகன் தினேஷ் விருப்பப்படி இனி மது அருந்தமாட்டேன் என்று தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தந்தை மாடசாமி உறுதி அளித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் வீட்டில் வந்து தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் தனது தந்தை இப்படி தினமும் குடித்துவிட்டு வருவதால் மனமுடைந்த மகன் தினேஷ் என்ற 17 வயது மாணவன், மனமுடைந்து ரயில்வே மேம்பாலத்தில் பள்ளிச் சீருடையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் தன் மரணத்திற்கு பிறகாவது குடிக்காமல் இருக்க வேண்டும் என்று தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தார்.

அதில் டாஸ்மாக் கடைகளை பிரதமர் மோடியும், முதலமைச்சர் பழனிசாமியும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஆவியாக வந்தாவது மதுக்கடைகளை ஒழிப்பேன் என்றும் அந்த கடிதத்தில் ஆவேசத்துடன் மாணவன் தினேஷ் பதிவு செய்திருந்தார். தினேஷின் இந்த தற்கொலை சம்பவத்தினால் தமிழக மக்கள் மிகவும் வேதனைக்குள்ளானார்கள். அரசியல் கட்சி தலைவர்களும் மதுக்கடைகளுக்கு எதிராகவும் தினேஷின் மரணம் அனைவருக்கும் பாடமாக இருக்கட்டும் என்றும் தங்களது கண்டனங்களையும், கருத்துக்களையும் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், தினேஷின் தந்தை மாடசாமி இனி சத்தியமாக மது அருந்த போவதில்லை என்று உறுதி அளித்துள்ளார். தனது 3 குழந்தைகளையும் மருத்துவம் படிக்க வைக்க தினேஷ் விரும்பியதால் அவர் ஆசைப்படியே அவர்களை மருத்துவம் படிக்க வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
இது கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் போன்றது. ஒரு நல்ல மகனை இழந்துதான் இதுபோன்ற தந்தைகளுக்கு புத்தி வரவேண்டுமா? மாடசாமி இனி குடிக்க மாட்டேன் என்று ஆயிரம் சத்தியம் செய்தாலும் தினேஷ் உயிருடன் வரப்போவதில்லை. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்ற நிலை இனி ஏற்படாமல் இருக்க வேண்டும். ஒருவேளை மதுஅருந்த மாட்டேன் மற்றும் 3 குழந்தைகளை மருத்துவம் படிக்க வைப்பேன் என்ற முடிவுகளில் மாடசாமி உறுதியாக இருந்தால் அது தினேஷின் ஆன்மாவை ஓரளவாவது திருப்திபடுத்தும்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications