பிக் பாசில் இருந்து வெளியேற்ற சதி.. ஜூலி கதறல்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என்னை வெளியேற்ற சதி நடக்கிறது என்று ஜல்லிக்கட்டு போராட்ட பெண்மணி ஜூலியானா கூறியுள்ளார்.
பல மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டுக்குள் தங்க வைக்கப்பட்டு இவர்களை சுற்றி 30 கேமராக்கள் கண்காணித்து வரும். இதில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மட்டும் அன்றாடம் இரவு 9 மணி முதல் 10 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் குழுவில் யார் ஜெயிப்பது என்பது பற்றி தன் விளக்கம் தரும்படி அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வரும் மேடையில் ஏறி, நான் வெற்றி பெறுவேன், அதற்கு என்ன காரணம் என்பது பற்றியும் பேசினர். இதில், ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி பேசுகையில், திடீரென கதறி அழுதார். இதனால், மற்றவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கணேஷ் வெங்கட்ராம், சக்தி ஆகியோர் ஜூலிக்கு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து பேசிய ஜூலி, நான் சாதாரண குடும்பத்துப் பெண். எனது தந்தை மிகவும் சிரமப்பட்டு எங்களை காப்பாற்றினார். சிறு வயது முதலே கல்விபெற மிகவும் கஷ்டப்பட்டேன். தொண்டு நிறுவனங்களின் உதவியால்தான் படித்து, முன்னுக்கு வந்தேன். நர்ஸ் வேலையில் தற்போது உள்ளேன். நான் எப்போதும் உண்மையே பேசுவேன். எனக்கு பொய் எல்லாம் பேசத் தெரியாது. நடிக்கவும் தெரியாது. நான் வெற்றி பெறுவேன். பிக் பாஸ் பட்டம் வெல்வேன் ஆனால், இங்கே இருப்பவர்கள் என்னை சாதாரண ஆளாகப் பார்த்து புண்படுத்துகிறார்கள். இவ்வாறு ஜூலி கூறினார்.












Click it and Unblock the Notifications