For Daily Alerts
Just In
உள்ளாட்சித் தேர்தல்... யாருக்கும் ஆதரவு இல்லை - முக அழகிரி
சென்னை: வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
பதில்: யாருக்கும் ஆதரவு இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் நான் குறுக்கிட மாட்டேன்.
கே: திமுகவை ஆதரிக்கவில்லை என்றால், வேறு யாருக்கு உங்களது ஆதரவு?
ப: நல்லோர் பக்கம் இருப்பேன் என்றார் மு.க. அழகிரி.
அதன் பிறகு கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தாயார் தயாளு அம்மாளை மு.க. அழகிரி சந்தித்தார். சிறிது நேரம் வீட்டில் இருந்தவர், பிறகு மதுரை புறப்பட்டுச் சென்றார்.
Comments
English summary
MK Azhagiri says that he wouldn't support anyone in local body election.
Story first published: Wednesday, October 5, 2016, 7:48 [IST]