கார்த்தி சிதம்பரம் சென்னை திரும்பியதும் விசாரணைதான் - சி.பி.ஐ. கிடுக்குப்பிடி
சிபிஐ பிடியில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும், அவரிடம் நேரில் விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரி
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் மீது, 2007 ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் அந்நிய முதலீட்டைப் பெற்று தந்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இதனையடுத்து அந்த வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து சென்னையில் உள்ள கார்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர். அதில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா கார்த்தியின் நிறுவனத்திற்கு பணம் தந்ததற்கான ரசீதுகளையும் இ-மெயில் பரிமாற்றங்களையும் சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது. இதனால் கார்த்தி சென்னை திரும்பியதும் அவரிடம் விசாரணை செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications