துணை முதல்வர்- வைகோ, கல்வி- திருமா, நிதி- ஜி.ஆர், உள்ளாட்சி- முத்தரசன்: சுதிஷ் அறிவிப்பு!
கோவில்பட்டி: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் வைகோ துணை முதலமைச்சராக செயல்படுவார் என்று தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார கூட்டம் கோவில்பட்டியில் இன்று நடந்தது. கூட்டத்தில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் சுதிஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சுதிஷ், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வென்றால் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாக்கக்கள் ஒதுக்கப்படும் என்று சுதிஷ் அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைத்தால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலைமைச்சாராக செயல்படுவார். துணை முதல்வராக வைகோ இருப்பார். நிதித்துறை ஜி.ராமகிருஷ்ணன், கல்வித் துறை திருமாவளவன், முத்தரசனுக்கு உள்ளாட்சி துறை ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதிமுக இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சுதிஷ் அறிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மின்னல் முகமது அலி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மக்கள் நலக்கூட்டணி வென்றால் ஆட்சியில் அமைச்சரவையில் யார் யார் ? கோவில்பட்டி கூட்டத்தில் இலாக்காக்களை சுதீஷ் அறிவித்தார்.
முதல்வர் -விஜயகாந்த்
துணை.முதல்வர் ; வைகோ
நிதி; ஜி.ராமகிருஷ்ணன்
கல்வி; திருமாவளவன்
உள்ளாட்சி; முத்துராசன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.













Click it and Unblock the Notifications