முதல்வருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது : ஹெச்.ராஜா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வருக்கே இந்த நிலைமை என்றால்.. சாதாரண குடிமக்கள் நிலைமை என்னவாகும்? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த அராஜகங்களை பகீரங்கப் படுத்தினார்.

If the Chief minister face threatens means What will happen for ordinary citizens? - H.Raja

முதல்வர் ஓபிஎஸின் இந்த செய்தியாளர் சந்திப்பு நாட்டையே உலுக்கியுள்ளது. அவரது முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடரபாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா முதல்வரை மிரட்டி சசிகலா தரப்பு ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களின் நிலை என்ன ஆகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு அளிப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கூடுதல் பாதுகாப்பு தேவைப்பாட்டால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் கோரலாம் என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+