"ஸ்டில்லுக்குத் துட்டு".. கட்சியினரிடம் கறார் காட்டிய வைகோ!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள கட்சிக்கு நிதி உதவியளிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
தென்சென்னை கிழக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தரமணியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் முடிவடைந்த உடன் வழக்கம் போல வைகோவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க கட்சி நிர்வாகிகள் முண்டியடித்தனர்.

இதனைக் கட்டுப்படுத்த நினைத்த வைகோ திடீரென மைக் பிடித்தார். "கட்சிக்கு நிதி உதவி கொடுப்பவர்கள்தான் என்னுடன் புகைப்படம் எடுக்க அனுமதிப்பேன்" என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அங்கு வந்திருந்த மதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனாலும் தலைவரே சொல்லிட்டாரே என தேற்றிக் கொண்டு பணம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர் நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications