தஞ்சை பெரிய கோயிலில் பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு.. பக்தர்கள் வெளியேற்றம்.. பரபரப்பு
தஞ்சை பெரிய கோயிலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Recommended Video

தஞ்சை: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையில் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் பழமையான கோயில்களில் இருந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்ததும், அதில் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியதும் வெளியே தெரியவந்தது.

சிக்கிய சிலைகள்
இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டு, இதுகுறித்த நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன்படி, பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. இதில் சில தொழிலதிபர்கள் கையும் களவுமாக சிக்கினார்கள். ஐம்பொன் உள்ளிட்ட ஏராளமான சிலைகளும் மீட்கப்பட்டன.

89 சிலைகள் பறிமுதல்
தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு தீவிரம் காட்டி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீட்டிலிருந்து 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலைகள் எல்லாமே நந்தி சிலைகள்தான்.

தஞ்சாவூர் பெரிய கோயில்
அத்தனை சிலைகளையும் கும்பகோணத்துக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், அவை எல்லாமே நந்தி சிலைகள் என்பதால் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குள் ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

பக்தர்கள் வெளியேற்றம்
அதன்படி இன்று பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கோயிலுக்குள் ஆய்வு நடத்தினர். அதன் காரணமாக கோயிலுக்குள் இருந்த அனைத்து பக்தர்களும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பெரிய கோயிலின் முக்கிய கதவுகளும் மூடப்பட்டது. இதனையடுத்து 50 பேர் கொண்ட சிலை கடத்தல் தடுப்பு குழு ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications