டெங்கு மரணங்கள்: சென்னை ஐஐடி மாணவர் உட்பட ஒரே நாளில் 3 பேர் பலி
டெங்கு காய்ச்சல் காரணமாக ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் நேற்று இரவு மரணமடைந்துள்ளார். தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
சென்னை: ஐஐடி மாணவர் பிரேம் அவினாஷ் ,21. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர் சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஐஐடி வளாகத்தில் இருந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்த இவர், மேல்சிகிச்சைக்காக, வேளச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் என தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரம் கிராமத்தைச் சேர்ந்த பாலசண்முகம் என்பவரது மனைவி பிரியா. கடந்த 15 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு இரத்த பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கவிதா என்ற இளம் பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியானார். கோவை தனியார் மருத்துவமனையில் 30 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் காய்ச்சலுக்கு கடந்த ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டெங்குவை தவிர்த்து மற்ற காய்ச்சலுக்கு 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிக்கன் குன்யாவுக்கு தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications