காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக பாஜகவுக்கு உடன்பாடு : எம்பி இல கணேசன் திட்டவட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உள்ளது என்று எம்பி இல கணேசன் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உள்ளது என்று எம்பி இல கணேசன் திட்டவட்டமாக கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு அதில் முனைப்பு காட்டவில்லை.

இதனிடையே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. பின்னர் மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை என்றது.

 தீர்மானம்

தீர்மானம்

இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

இது குறித்து மாநிலங்களவை எம்பி இல கணேசன் கூறுகையில் , காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 6 வாரத்துக்குள்

6 வாரத்துக்குள்

காவிரி மேலாண்மை அமைப்பது என்ற கருத்தில் தமிழக பாஜகவுக்கு உடன்பாடு உண்டு. 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அனுமதி தரக் கூடியவர்

அனுமதி தரக் கூடியவர்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு திசை திருப்பவில்லை. தன்னை சந்திக்க பிரதமர் யாருக்கும் அனுமதி தரக் கூடியவர்.

தவறு இல்லை

தவறு இல்லை

பிரதமர் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல. முதலில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்திக்குமாறு கூறியதில் தவறேதும் இல்லையே என்றார் இல கணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+