கரூர் அருகே சட்டவிரோத வெடிமருந்துகள் அழிப்பு
கரூர்: கரூர் மாவட்டம் தோகமலையில் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை போலீசார் அழித்தனர்.
கரூர் மாவட்டம் தோகமலை பகுதியில் சட்ட விரோதமாக ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டு சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து இருவரை கைது செய்தனர்.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உட்பட பல்வேறு வெடிமருந்துகளை திருச்சி வெடிமருந்து கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்புத்துறை ஆய்வாளா் ராமு தலைமையில், நல்லாகவுண்டம்பட்டி குளத்தில் வைத்து அழித்தனா். அப்போது தோகமலை காவல் துறை இன்ஸ்பெக்டா் முகமது இத்ரீஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமாா், அபிமன்யு மற்றும் போலீசார் உடனிருந்தனா்.
வெடி மருந்துகளை அழித்த போது சுமாா் 1 கி.மீ. சுற்றளவுள்ள கிராமங்களில் ஒலி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.