நெடுவாசல் கூட தெரியாமல் பேசிய இமான் அண்ணாச்சி.... திமுக மேடையில் இன்னுமொரு சர்ச்சை
நெடுவாசல் பற்றி தெரியாமல் பேசி வைகோவை கிண்டலடித்துள்ளால் திமுக பேச்சாளர் இமான் அண்ணாச்சி
சென்னை: ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய இமான் அண்ணாச்சி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை கிண்டலடித்து பேசினார். அப்போது நெடுவாசல் கூட தெரியாமல் அது ஏதோ வாசல் இருக்கே என்று கேட்டார்.
சென்னையில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக பங்கேற்ற ராதாரவியும், இமான் அண்ணாச்சியும் வைகோவை கிண்டலடித்தனர்.

வைகோ ரொம்ப ராசியானவர், அவர் யாருக்கு வாழ்த்து சொல்கிறாரோ அவர் ஜெயிலுக்கோ, மருத்துவமனைக்கோ சென்றுவிடுவார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒருவர் டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர் தினசரி 20 கிலோ மீட்டர் நடக்கச் சொன்னார். அவர் நடந்து போனார், அவரோடு ஊருக்கே போயிட்டார் போல இருக்கு அங்க இருந்து டாக்டரிடம் போன் செய்தார்.
அப்போது டாக்டர், நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்டார். அதற்கு அவர், டாக்டர்... நான் ஏதோ வாசல்... அது என்னா வாசல்... அதான் இப்போ ஒரு வாசல் இருக்கே ஆ... அதாங்க நெடுவாசல் அங்க இருக்கேன் என்றார். அப்படி நடந்து போனது யார் தெரியுமா? அவர்தான் வைகோ என்றார் இமான் அண்ணாச்சி.
வைகோவை கிண்டல் செய்கிறேன் என்ற பேரில் நெடுவாசல் போராட்டத்தை இமான் அண்ணாச்சி கொச்சைப்படுத்தினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications