சென்னை தேனாம்பேட்டையில் திடீரென சாய்ந்த 3 மாடி கட்டடம்... பொதுமக்கள் பீதியால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேனாம்பேட்டையில் மூன்று மாடி கட்டிடம் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் மிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தேனாம்பேட்டை பகுதியும் ஒன்று. இந்த நிலையில் அங்கு எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள கட்டடம் திடீரென சாய்ந்ததால் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, அனைவரும் அப்பகுதியில் இருந்து வெளியேறினர். ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட போதெல்லாம் சிறிது சிறிதாக கட்டடம் சாய்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டிய போது கட்டடம் சாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டடம் சாய்ந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications