For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாடிக்கையாளர்கள் ஆத்திரம்.. சென்னையில் ஏர்செல் அலுவலகம் மீது தாக்குதல்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அவதியில் ஏர்செல் வாடிக்கையாளர்கள்-வீடியோ

    சென்னை: சென்னையில் ஏர்செல் அலுவலகம் மீது வாடிக்கையாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் உட்பட நாடு முழுக்க பல பகுதிகளிலும் ஏர்செல் செல்போன் சேவையில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. நிதி பற்றாக்குறை விவகாரத்தால் செல்போன் டவர்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இதுதான், சேவை முடங்கியதற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    In Chennai, Aircel's office has been attacked by customers

    கோவையிலுள்ள ஏர்செல் தலைமை அலுவலகத்தில் நேற்று வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சென்னையில், வாடிக்கையாளர்கள் கோபம் வன்முறையாக மாறியுள்ளது.

    சேவை முடங்கியது பற்றி மேற்கு தாம்பரத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்திற்கு, புகார் கொடுக்க சென்ற வாடிக்கையாளர்கள் தாக்குதலில் இறங்கியுள்ளனர். சேவை முடங்கியது பற்றி வாடிக்கையாளர்கள் புகார் கொடுக்க சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டதால், கோபமடைந்த சில வாடிக்கையாளர்கள், கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

    இதில் அலுவலகத்தின் பெயர் பலகை, பேனர்கள் கிழிந்துள்ளன. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவம் மேற்கு தாம்ரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    In Chennai, Aircel's office has been attacked by customers due too the service interruption.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X