கன்னியாகுமரியில் ரூ. 2000 கோடி ரூபாய் மோசடி- நிதி நிறுவன பினாமிகள் 3 பேர் கைது!
கன்னியாகுமரியில் ரூ2, 000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன பினாமிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்தம்பாலையில் ரூ2,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக்க நிதி நிறுவன பினாமிகல் 3 பேரை பொருளாதார குற்றவியல் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மத்தம்பாலையில் கிருஷ்ணா நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளார் நிர்மல் மற்றும் அவரது நண்பர்கள் ரூ2,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கன்னியாகுமரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தி மோசடியில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த மெகா மோசடியில் தொடர்புடைய ரவீந்தரன், அஜித் குமார், சேகரன் நாயர் ஆகிய மூவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் கிருஷ்ணா நிதி நிறுவன உரிமையாளர் நிர்மல் மோசடியில் ஈபடுவதற்கு துணையாக இருந்த அவரது பினாமிகள் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மூவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications