கன்னியாகுமரியில் மாணவர் கையை பிளேடால் கீறிய இளைஞர்... ப்ளூவேல் விபரீதமா?
கன்னியாகுமரி, குலசேகரத்தில் மாணவர் கையை இன்னொரு இளைஞர் பிளேடால் கீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளூவேல் விளையாட்டாஅல் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி: குலசேகரத்தில் மாணவர் ஒருவர் கை அறுபட்ட நிலையில் தெருவில் மயங்கிக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ப்ளூவேல் விளையாட்டால் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மற்றும் புதுச்சேரியில் கல்லூரி மாணவர்கள் ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியாகியுள்ளனர். மேலும் வங்கி பெண் ஊழியர் இந்த விளையாட்டால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனையடுத்து இந்த விளையாட்டை தடை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவர் ஒருவர் நாகக்கோடு பகுதியில் உள்ள ஒரு சந்துக்குள் கை அறுப்பட்ட நிலையில் ரத்தத்துடன் மயங்கி கிடந்தார். அதை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவரின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க அவர் அங்கு பதற்றத்துடன் வந்தார்.
உடனே, மகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது தந்தைக்கு இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவரிடம் ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதமா என விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவர் புளூவேல் விளையாட்டு எதுவும் விளையாடவில்லை என்று கூறினார்.
மேலும் வகுப்பில் இருந்து பாட்டி வீட்டுக்கு சென்றபோது தன்னை ஒரு வாலிபர் பின்தொடர்ந்ததாகவும் அவர் திடீரென தன்னை மறித்து கையை பிடித்து இழுத்து பிளேடால் கீறியதால் மயங்கி விழுந்ததாகவும் கூறினார். போலீசார் மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications