மதுரையில் கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை... 6 பேர் பலி- வீடியோ
மதுரையில் மொத்தக் குடும்பமும் தற்கொலைக்கு முயற்சித்து அதில் 6 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயற்சித்து அதில் 6 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் நர்சரி பள்ளி, ரியல் எஸ்டேட் உள்ளிடட் தொழில்களைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் கடன் வாங்கியுள்ளார்.

ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வது என முடிவு செய்து, குடும்பத்தில் இருந்த 8 பேரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இந்நிலையில் குமரன் வீட்டு கதவு நெடுநேரமாக பூட்டியிருப்பதைக் கண்டு அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் உள்ளே சென்றுபார்த்த போது குடும்பமே தற்கொலை செய்திருந்தது தெரிந்தது.
அதனையடுத்து அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் 6 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் இன்னும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து கூறிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் காரணங்கள் தெரிய வரும். மேலும் 108 ஆம்புலன்ஸ் தாமதம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என கூறினார்.
மொத்தக் குடும்பமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications