Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்கே நகரில் பணப் பட்டுவாடா: கையும் கரன்சியுமாக சிக்கிய தினகரன் கோஷ்டியின் சந்தானம்!

ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற டிடிவி தினகரன் அணியின் பகுதி செயலர் சந்தானம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் அதிமக அம்மா கட்சியின் பகுதி செயலர் சந்தானம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றார். அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து செய்தனர்.

ஆர்கே நகர் தொதியில் இடைத்தேர்தல் நடைபெற இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்.கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக(அ) அணி பகுதி செயலர் பிடிபட்டார்.

In RK Nagar constituency TTV. Dinakara team member Santhanam gives money to the voters for voting

தண்டையார்பேட்டையில் பணத்துடன் சந்தானத்தை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவரை கைதுசெய்தனர். டி.டி.வி தினகரனுக்கு வாக்களிக்கக் கோரி பொதுமக்களுக்கு பணம் தர சந்தானம் முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிடிவி.தினகரன் தரப்பைச் சேர்ந்த ஒருவர் ஏற்கனவே பணப்பட்டுவாடா செய்தபோது கைது செய்யப்பட்டார். நேற்று கொருக்குப் பேட்டை பகுதியில் குத்துவிளக்கு வழங்கிய நளினி என்ற பெண்ணை பறக்கும் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்நிலையில் டிடிவி.தினகரன் தரப்பைச்சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+