திருவாரூரில் மறியல் போராட்டம்... தஞ்சை - காரைக்கால் ரயிலை மறித்தனர் விவசாயிகள்!
திருவாரூர் அருகே பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்: குளிக்கரையில் பயணிகள் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் ரயிலை மறித்தள்ளனர்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தால் சென்னை மாநகரரில் பெரும்பாலா கடைகள் அடைக்கப்பட்டன.

கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியது. இந்நிலையில் திருவாரூர் அருகே விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளிக்கரையில் தஞ்சை- காரைக்கால் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
விவசாயிகளின் இந்த ரயில் மறியல் போராட்டம் காரணமாக பயணிகள் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications